Skip to main content

Posts

பெயரிடப்படாத பெண்ணின் அந்தரங்கக் கடிதம்

பெயரிடப்படாத பெண்ணின் அந்தரங்கக் கடிதம் அன்பானவனே! “நலமா? … என் ஒரு நாள் அனுபவத்தை இந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய். தினம் தினம் நீ தெரிந்துகொள்ள விருப்பத்துடன் இருக்கிறாய். அதிகம் தேடப்படும் வாசகங்களில் ஒன்றாக இணையத் தேடுபொறிகள் எங்கள் அந்தரங்கங்களின் பெயர்களைத்தான் சொல்கின்றன. என் நண்பனாய், கணவனாய், தகப்பனாய், காதலனாய், சகோதரனாய் இன்னும் எல்லாமுமாய் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட உனக்குப் பெயர் போட்டுக் கடிதம் எழுதும் அளவுக்கான சுதந்திரத்தை இன்னும் சமூகம் வழங்கவில்லை. ஏன் என் சொந்த சகோதரியிடமே மனம்விட்டுப் பகிர முடியாததுதானே அந்தரங்கம்? வீட்டில் யாருக்கும் நான் படிப்பதில் விருப்பமில்லை. திருமணம் முடித்துவிட்டால் ஒரு சுமை முடிந்ததென்று நினைத்திருந்தார்கள். நானோ, அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். தனியார் நிறுவனங்களின் வேலை நேரங்கள், வீட்டு வேலையும், அலுவலக வேலையும் இணைத்துச் செய்யும் வா...

பாட்டி - ஒரு தலை முறையின் இடைவெளி

பாட்டி ---தலை முறையின் இடைவெளி மாமா வீடுதான் அவளுக்குத் தஞ்சம். நடு வீட்டின் ஒரு ஓரம் பாய் விரித்து அமர்ந்து இருப்பாள் தாத்தா சென்றபின் எங்கும் செல்வதில்லை பேர குழந்தைகளைத் தவிர. கண் சரியாகத் தெரியாத போதும் வகையாகச் சரியாகச் சேர்த்து மடித்து வெத்தலை இடிப்பதில் ஒரு ராகம் இருக்கும் டக்.டக்.டக்.என்று. எப்பொழுதாவது அம்மாவுடன் மாமா விடு செல்வேன். யாரு........ஆங் .......வா.... அம்மாவை அருகில் இருத்திகொள்வாள். மெதுவாக என்னென்னவோ சொல்வாள் அம்மாவிடம் அது அதிகமாக அத்தையை பற்றிதான் இருக்கும். சிதம்பர ரகசியம் முடிந்ததும் எங்கடா......நீ......இருக்க என்ன ......... இந்தா .......இடித்து வைத்திருக்கும் வெத்தலையை தருவாள். அப்படியொரு சுவை இருக்கும் அதில் சொல்லிமாளது. பின் ------ அருகில் இருத்தி தலையைத் தான் முதலில் தொடுவாள் என்னடா...இது ....கூத்தாட்டி...மாதிரி இவ்வளவு முடி......வெட்டு முதல்ல பின் கால் பக்கம் கையை வைத்து எப்ப…பாரு ......சாக்கு மாதிரி துணில ஒரு டவுசர்.......... உங்க .......அப்பன .........சொல்லணும் ...ம்ம் நல்லா படிக்கிறியா.......ஆங்......... நல்ல பாசம் மிகுந...

யாமத்துக் கைக்கிளை - பாபு

யாமத்துக் கைக்கிளை... விளக்கம் கொடுக்காம போனது என் தப்புதான். ஒருத்தரு என்னடான்னா... சாமத்துல எவனோ வந்து என் சைக்கிளைக் களவான்டுக்கிட்டு போயிட்டானாம்... அதை நெனச்சுப் பொலம்புறேன்னு பொடேர்னு பொடரியில அடிச்சாப்ல சொல்லிட்டுப் போயிட்டாரு.... என்சைக்ளோபீடியான்னா.... என் சைக்கிளைப் பிடிய்யான்னு பதம்பிரிக்குற பயலுவ நம்ம பயலுவதானே.... சரி போகட்டும்... கைக்கிளைன்னா என்னன்னு பாக்குறதுக்கு முன்னாடி திணைன்னா என்னன்னு பாத்துருவோம். திணைன்னா பிரிவுன்னு பொருள். வாழ்க்கையையும் ஒரு பொருளாகப் பாத்தாங்க நம்ம முன்னோர்கள். அதனை ரெண்டு பிரிவா... அதாவது ரெண்டு திணையாப் பாத்தாங்க. 1.  அகத்திணை  - ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்றதைப் பத்தி பேசுவது 2.  புறத்திணை  - அகவாழ்வு தவிர்த்து புறத்தே எல்லோருக்கும் தெரியும் ஒழுக்கத்தைப் பத்தி பேசுறது அகத்திணையைப் பாத்தீங்கன்னா... தொல்காப்பியத்துல 7 திணைகளா பிரிச்சுருக்காரு நம்ம தொல்காப்பியரு. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம்-1) அது என்னன்னா... கைக்கிளை (மொதல்ல நம்ம திணை ...

எண்களை எண்ணிப் பார்க்கிறேன் ( Fibonacci Numbers ) - பாபு

எண்களை எண்ணிப் பார்க்கிறேன்... எப்பொழுதிலிருந்து எண்கள் என்னை வசீகரித்தன என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் எனக்குப் புதிரான ஒன்று என்றால் அது இந்த எண்கள்தான். இன்னமும் அதன் மீதான வியப்பும் ஆச்சர்யமும் எனக்குள்ளே இருக்கின்றன. யார் கண்டு பிடித்திருப்பார்கள் இந்த எண்களை? அல்லது எண்களே தங்களை நமக்குக் காட்டிக் கொண்டனவா? எப்படி அவற்றிற்கான மதிப்புகள் நம் நினைவில் தோன்றின? எங்கே தொடங்குகின்றன? எங்கே முடிகின்றன? அவைகளுக்குள்தான் எத்தனையெத்தனை மர்மங்கள்.... எத்தனையெத்தனை தொடர்புகள்...! எனக்கு எண்களை முதன் முதலில் போதித்தது யார் என்று நினைவில் இல்லை. ஆனால், கணக்குப் போடுவதற்கு ரூபாய் நாணயங்களை வைத்து என் தந்தை சொல்லிக்கொடுத்தது நினைவில் இருக்கின்றது. அதன் பின்னர் இரண்டாம் வகுப்பில் பெருக்கல் வாய்ப்பாடு படித்தது நினைவில் இருக்கின்றது. அப்பொழுதெல்லாம் குருட்டு மனப்பாடம்தான். எல்லோரையும் உட்காரவைத்து... ஒவ்வொருவராக முன்னால் வந்து சத்தம் போட்டு சொல்லவேண்டும். அதனை மற்றவர் திருப்பிச் சொல்லவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்கையில் அது மனப்பாடம் ஆகிவிடும் என்பது தாத்பர்யம். ஆனால், எனக்கெ...